Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகள் கோரோனா வைரஸ் தடுப்பு முன் நடவடிக்கைக்காக அறிவித்த 144 தடை உத்தரவை சிறிதும் பொருட்படுத்தாமல் 40 சதவீத பொதுமக்கள், இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் வீதியில் சுற்றித் திரிந்து வருகிறார்கள்.
மேலும் இவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி காவல் துணை கண்காணிப்பாளர் சின்னராஜ் ஆலோசனையின் பேரில் ஆய்வாளர் சாலமேன்ராஜா, உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உதவியுடன் புதிய பேருந்து நிலையம் அருகே இளைஞர்களை இருசக்கர வாகனத்துடன் பிடித்து அவர்களை தோப்புக்கரணம் போட வைத்தனர்.
இனிமேல் தேவையில்லாமல் வெளியில் வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்து போலீஸார் அனுப்பி வைத்தனர்.